கொப்பளிக்கும் குருதி!
அக்கினியால்
சுட்டாலும்...
அகண்ட
வாய் கொண்டென்னை ஏசினாலும்...
குருதி
வழிய குடைந்து தீர்த்தலும்!
மனமறுத்து
மயங்க மாட்டேன்!
மதி
இழந்து வருந்த மாட்டேன்!
மாறாய்
சினம் அடக்கி வரம் செய்வேன்!- சாகமாட்டேன்!
பொய்த்திரை
பூண்டு..
புகழ்
எய்தும் புத்தி - கொடுக்கவில்லை என் தாயும்!
அன்பை
அறுத்து ...
பண்பை
வளர்க்கும் பாடம் - படிக்கவில்லை நானும்!
சூழ்ச்சிகளில்
சிக்கி சூட்சுமங்கள் கற்று..
சுயம்புவாய்
சுடர்கின்றேன்!
சூழ்நிலைகள்
என்னை சூனியமாக்கலாம்!
சுற்றங்கள்
என்மீது குற்றங்கள் சுமத்தலாம்!
கணுக்கால்
நரம்பறுத்து என் கனவுகளைக் கட்டலாம்!
கவலை
இல்லை!
என்
ஆத்மம் ஒன்றே!
அப்புழுக்கற்ற
அன்பு!
அறிந்தவர்களுக்கும்-அறைந்தவர்கர்களுக்கும்!
சம அளவு அன்பே!
வாழ்க்கை!
புரியாமல்-தெரியாமல் இருந்து விட்டால் சுகம்!
புரிந்தும்
-தெரிந்தும் இருந்து விட்டால்....
நீ பிழையே!
(அன்பே
சிவமும்! அன்பே சக்தியும்!
அன்பே
ஹரியும்! அன்பே பிரம்மமும்!
அன்பே
தெய்வமும்! அன்பே மனிதரும்!
அன்பே
சத்தியம்! அன்பே நிதியம்!
அன்பே
சந்தம் ! அன்பே ஆனந்தம்!
அன்பே
மௌனம் ! அன்பே மோட்சம்!
அன்பே
நீயும்! அன்பே நானும்!
ஆக்கம்
- கந்த குரு கவசம்)
அன்புடன்
கோ கோ
Comments
Post a Comment