இருப்பின் கனம்!

வழி தொலைந்த பாலைவனத்தில்.. நா வற்ற.. நாளம் வற்ற.. முற்றும் போகும் ஒற்றை நொடி முன் கண்ணில் படும் கானல் குளம்.. உயிர்- இருப்பின் கனம்! உள்ளம் கலந்தவள்.. உயிரைக் கடந்தவள்.. கவிஞன் அவனென்று காதலும் துறந்தவள்.. கண்டவன் கைகோர்த்து குண்டமும் எரிக்கையில்... வெந்திடும் விறகோடு அவன் விரகமுமே! காதல் - இருப்பின் கனம் ! சிறுவயதில்.. இடுப்பை விட்டு இறங்காத மகன்.. பெருவயதில்.. இடுப்பை உடைத்து மூலையில் வீச.. விம்மிய தாயின் வழிந்த கண்ணில்... கருணை- இருப்பின் கனம்! கோ கோ

Comments

Popular posts from this blog

அவளும் நானும்!

தனிமை ஒரு வரம்!