இருப்பின் கனம்!
வழி
தொலைந்த பாலைவனத்தில்..
நா வற்ற..
நாளம் வற்ற..
முற்றும் போகும் ஒற்றை நொடி முன்
கண்ணில் படும் கானல் குளம்..
உயிர்- இருப்பின் கனம்!
உள்ளம் கலந்தவள்..
உயிரைக் கடந்தவள்..
கவிஞன் அவனென்று காதலும் துறந்தவள்..
கண்டவன் கைகோர்த்து குண்டமும் எரிக்கையில்...
வெந்திடும் விறகோடு அவன் விரகமுமே!
காதல் - இருப்பின் கனம் !
சிறுவயதில்..
இடுப்பை விட்டு இறங்காத மகன்..
பெருவயதில்..
இடுப்பை உடைத்து மூலையில் வீச..
விம்மிய தாயின் வழிந்த கண்ணில்...
கருணை- இருப்பின் கனம்!
கோ கோ
Comments
Post a Comment