பைத்தியக்காரன்!
எரித்த பூவை கையில் வைத்துக்கொண்டு .. என் இதயத்தைக் கேட்கிறேன் ... என்னவள் எங்கே ? நானே வெறுத்தாலும் .. என்னை பொறுத்து - ஆளும் ! என்று சொன்ன என்னவள் எங்கே ? உலகமே உம்மை எதிர்த்தாலும் .. உம் திலகமாய் .. உடனிருந்து கரம் பிடிப்பேன் ! என்று சொன்னவள் எங்கே ? மதி இழந்து .. பிழை செய்து .. விழி பிதுங்கி வீழும் முன் . என் விரல் கொடுத்து மீட்பேன் .. என குரல் கொடுத்தவள் எங்கே ? என்னைப் பெற்றவளை ... எனக்குப் பெற்றுத்தருவேன் ... என பாடம் சொன்ன என்னவள் எங்கே ? எறிந்த பூவின் எச்சம் .. என் இதயத்தை பொசுக்கும் நேரம் ! உன் முழியான் கண் வழி வழியும் துளி ஒன்றும் ! குழந்தை குறுநகை ஒன்றும் ! கொண்டு வா ! நம் அன்பின் ஆழி ! எதுவென .. அகிலம் உணரட்டும் ! …………… முள்ளை முத்தமிட்டு .. முல்லை என்ன சொல்லிக்கொண்டேன் ! பைத்தியக்காரன் ! கோ கோ