உதிரத்தில் உயிர்த்த விதை!

காற்று வெளியிடை கண்ணம்மா...
என் கண்கள் வழிந்ததடி..

பிறந்த நாளின்று...
மறந்த நீ என்னை..
இறந்து கண்டேனே!

விரகத்தில் நான் விதைத்த விதைகள் எல்லாம்......
உன் கண்ணொளி காணாததால்....
மண்ணுக்குள் மடியுதடி!

உன் நெஞ்சுக்குள் இனினும் ஈரம் சுரக்காதெனில்.....
நரகத்தின் வாசலில் நிச்சயம் உன்னை நிறுத்துமடி !

கண்ணம்மா என் கண்கள் கலங்குதடி!

கோ கோ

Comments

Popular posts from this blog

அவளும் நானும்!

தனிமை ஒரு வரம்!

இருப்பின் கனம்!