இனி கலாம் கனவு நமது கண்களில்!

கலாமை காலம் விழுங்கிவிட்டது!!!
அக்னிசிறகின்று ஆகாயம் அடைந்து விட்டது!!!
விஞ்ஞானம் அறிந்த ஒரே மெய்ஞானி மறித்துவிட்டார்!!!
இரண்டாம் பாரதி இறந்துவிட்டார்!!!
இஸ்லாமிய விவேகானந்தர் வீழ்ந்துவிட்டார்!!!

ஏழ்மையில் எழுந்து...
வலி'மையால் விளைந்து...
எளிமையால் ஏற்றம் பெற்றவரே!!!

அகம் வெளுத்து
அன்புதழைக்க அறமாய்..
அன்புச்சரமாய் மொழிந்தவரே!!!

சௌரீகச் சக்கரத்தில்
 சு(ம)ருண்டு கிடந்த மூளை(களை)
சலவை செய்து
சாரம் சொன்னவரே!!!

வழி தொலைத்து
விழிபிதுக்கி மதியிழக்கும் போதெல்லாம்
கரம் பிடித்து
கரை சேர்த்தவரே!!!

ஏவுகனைக்கு மட்டுமில்லாது
எங்களுக்கும்
உந்து விசை கொடுத்தவரே!!!

இலக்கையடைய இலக்கணம் தந்தவரே!!!

எங்கள்
கண்களைத்திறந்து
கனவுகானசொல்லிவிட்டு.....
உம்-கண்களை மூடிக்கொண்டீரே!!!

இமையமும் சிறியது உம்தன் எளிமைக்கு முன்னால்!!!

இளைஞர்களின் எழுச்சியே!!!

நீவீர் என்றும் வாழ்வீர் எங்கள் நெஞ்சினுள்
அக்னிக்குஞ்சாய்!!!

என் தேசமே!!!எழுந்துவா!!!
 இனியாவது நிமிரிந்திடு!!!

வாருங்கள் இளைஞர்களே!!!ஒன்றுசேருங்கள்!!!
கலாம் கனவு நனவாக
கண்களை அகல விரித்து
கனவுகானுவோம் -நாம்!!!

                                                                                                                          அன்புடன்
                                                                                                                           கோ கோ

Comments

Popular posts from this blog

அவளும் நானும்!

தனிமை ஒரு வரம்!

இருப்பின் கனம்!